எங்கே போனார்கள் இந்த மாமனிதர்கள்.?

எத்தனையோ நல்ல விசயங்கள் இந்தியாவில் நடக்கும் பொது, பல விசயங்கள் கவனிப்பாரின்றி, மோசமாக நடந்து கொண்டு இருக்கிறது. செய்யவேண்டியவர்கள் செய்யாமல் இருக்கிறார்கள். என் கோபம் எல்லாம் இதை செய்யாமல் அவர்கள் வேற என்ன தான் செய்துக் கொண்டு இருக்கிறார்கள் இந்த மா-மனிதர்கள்?

Saturday, November 14, 2009

அதிகமாக குப்பைதொட்டிகளை வைக்கவும்

சென்னையின்* தெருக்களில் குப்பைதொட்டிகளில் குப்பை நிரம்பி அதை சுற்றியும் 5 அடி தூரத்துக்கு குப்பைகளாகக் கொட்டி கிடக்கிறது. இதனால் வரும் தொல்லைகளும் நோய்களும் சொல்ல தேவையில்லை. என்வே இரண்டு குப்பை தொட்டிகளை வைக்கவும். அப்படி இல்லை என்றால் மூன்று நாளைக்கு ஒருதடவை / 5 நாட்களுக்கு ஒரு தடவை குப்பைகளை எடுத்து செல்வதற்கு பதில் தினமும் இல்லை இரண்டு நாளைக்கு ஒரு தடவை ஏன் குப்பைகளை அப்புறபடுத்தக்கூடாது? இதை யார் செய்யவேண்டும்????

-இது சென்னைக்கு மட்டும் அல்ல, எல்லா ஊருக்கும் தான்.

ரங்கநாதன் தெருசுத்தம் செய்யுங்கள் குப்பைகளை அகற்றுங்கள்.

ரங்கநாதன் தெரு. சென்னை மக்களுக்கும், சென்னை சுற்றி உள்ள புறநகர் மற்றும் கிராம மக்களுக்கும் ரொம்ப பழக்கப்பட்ட தெரிந்த ஒரு இடம். தினமும் இங்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து போகும் இடம். இதனால் அங்குள்ள சில கடைகாரர்களுக்கு(மனிதர்களுக்கு) கோடிகணக்கான ருபாய் வருமானம். காலையில் இருந்து இரவு 10 , 11 மணிக்கு வரையும் வியாபாரம். அந்த தெருவில் எங்கு பார்த்தாலும் குப்பை கூழங்கள், மேடு பள்ளம், சாக்கடைகள் சரியாக மூடாமல், சாக்கடைகளின் கழிவுகள் நடைபாதையில் கொட்டி இருப்பது, தண்ணீர் தேங்குவது என ஏராளம். அங்கு உள்ள கடைகாரர்கள்/வியபாரிகள், வரும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி, அதை ஒன்று அல்லது இரண்டு ஆட்கள் வேலைக்கு வைத்து அந்த தெருவை ஏன் சுத்தமாக வைக்க கூடாது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வரும் இடத்திற்க்காக, இதை கூட ஏன் செய்ய கூடாது. இரவில் மாநகராட்சி துப்புரவாளர்கள் வரும் வரை -அந்த தெரு நாற்றம் அடித்திக் கொண்டுதான் இருக்க வேண்டுமா?. அந்த தெருவில் உள்ள பெரிய கடைகார்கள் சிந்தித்து இதை நிறைவேற்றுவார்களா அங்கு வரும் மக்களுக்காக?

Sunday, October 4, 2009

அதிகமாக முன்பதிவு செய்யாத (unreserved) பெட்டிகளை விடவும்:

வார இறுதி நாட்களில் இரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இது இந்தியாவில் எல்லா ஊர்களிலும் நடக்கிறது. இருக்கிற மூன்று அல்லது நான்கு பெட்டிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர் ஏறுகிறார்கள், உட்கார, நிற்க இடம் இல்லை. ஏன் இந்த அவலம். குறைந்தது வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் அதிகமாக பெட்ட்களை ஏன் இணைப்பதில்லை. முன்பதிவு செய்யாமல் போகும் மனிதர்கள், மனிதர்களாக தெரியவில்லையா?. இரயில்வேயில் இருக்கும் உயர் அதிகாரிகளும், அரசியல்வாதிகாலும், இந்திய அரசியல் அமைப்பைக் கட்டி பாதுக்காக்கும் மாமனிதர்களும், முன்பதிவு செய்யாத பெட்டிகளில் சென்று, அதன் வேதனையை உணரவேண்டும்.